கதைப் பாடல்
Kattabomman Story Song
வகை
வரலாறு / குழந்தைகளுக்கான கதைப் பாடல்
பாடல் முறை
வாய்மொழி வரலாறு
பாடப்படும் இடம்
கோவில்கள் மற்றும் ஊர்மக்கள் கூடும் இடங்கள்
பாடப்படும் சூழல்- காலம்
திருவிழாக்கள், வழிபாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் நேர்த்திக்கடனாக ஏற்பாடு செய்ப்பட்ட நாடக நிகழ்ச்சிகளில் இது நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.
ஊர்
காவலப்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்
பாலினம்
பாடலின் கால அளவு
பாடல் விவரங்கள்
இந்நாடகத்தில் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு பாடலாகவும் வசனங்களாகவும் அரங்கேற்றப்படுகின்றன. இந்நாடகத்தின் செயலாக்கத்தின் பொழுது மூன்று முதல் நான்கு இசைக் கலைஞர்கள் ஆர்மோனியம், தப்பு, தபலா, சாலரா போன்ற இசைக்கருவிகளை வாசிக்கின்றனர்.
கூடுதல் விவரங்கள்
கேட்பொலிக் கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள கதைப் பாடலின் விவரங்கள் பின்வருமாறு (refer audio file) :
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட அரசன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றுக் கதையை இவ்வூரைச் சேர்ந்த 65 வயது பெரியவர் திரு. முத்துசாமி அவர்கள் பாடல் வடிவில் பாடுகிறார். இந்நாடகத்தைச் சுமார் 15 பேர் கொண்ட குழு அரங்கேற்றுகிறது. சில சமயங்களில் ஒரு நடிகரே ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இந்த நாடகத்தில் கட்டபொம்மன், ஊமைத்துரை, ஆங்கிலேயர்கள் போன்ற பல கதாபாத்திரங்கள் உள்ளன.
தகவல்
முனைவர் முத்தையா