Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

கைத்தறி நெசவு

Handloom Textiles Production

வகை

கைத்தறி நெசவு


கைவினைப் பொருளின் பெயர்

கைத்தறித் துணிகள்


கைவினைக் கலைஞர் பெயர்

கைவினைக் கலைஞர் - ராதாகிருஷ்ணன். குழுத் தலைவரின் பெயர்  - ஜெயராமன்


பயன்பாடுகள்

ஆடைகள், துண்டுகள்


ஊர்

செல்லூர்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்

செல்லூர்' என்ற ஊர் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் பகுதியாகும். இவ்வூரில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுக்கூடங்கள் அதிகம் இருந்துள்ளன. கைத்தறித் துண்டுகள் உற்பத்திக்குப் பெயர் பெற்ற செல்லூரில், திரும்பிய பக்கமெல்லாம் கைத்தறிச் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க நூல்களில் நெசவைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். அதுமட்டுமின்றி இவ்விடத்திற்கு அருகிலுள்ள கீழடி அகழாய்விலும், பல நூற்றாண்டுகள் பழைமையான சுடுமண் தக்களிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொது ஆண்டு 1993, 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளங்களால் மக்களின் வாழ்வாதாரமாய் இருந்த கைத்தறித் தொழில் ஏறக்குறைய அழிந்தே விட்டது. இந்தப் பகுதி மக்கள் பிழைப்பிற்கு மாற்றுத் தொழில் வேண்டிச் சென்று விட்டனராம். இருப்பினும், சிலர், பாரம்பரியமிக்க இத்தொழிலைக் கைவிடாது இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

தொழில் முறை
தொழில் முறை(குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

காணொலி

தெ.துர்கா தேவி