Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

திரு இருதய ஆண்டவர் ஆலயம்

Sacred Heart Church

தேவாலயத்தின் வகை

ரோமன் கத்தோலிக்க திருச்சபை


ஆலயத்தின் சிறப்பு

ஒரு நூற்றாக்கு மேலாக இயங்கி வரும் இந்தத் தேவாலயத்தின் பாதிரியார்கள் சமூக வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.


வழிபாட்டுக் காலம்

காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை


ஊர்

மூஞ்சிக்கல்

மாவட்டம்

திண்டுக்கல்

திருவிழாக்கள் விவரங்கள்

திருச்சபைக்குப் பெயரிடப்பட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடைபெறும். ஜூன் மாதத்தில் ’இயேசுவின் புனித இதயம்’ என்ற திருவிழா மற்றும் ஆகஸ்ட் 15 அன்று ’லா சலேட்டின் அன்னைத் திருவிழா’ உட்படக் குறிப்பிடத்தக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1911ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தேவாலயம்
சிற்பங்கள்
செயின்ட் பால், செயின்ட் ஜூட், செயின்ட் சேவியர், செயின்ட் அந்தோணி, செயின்ட் செபாஸ்டியன், செயின்ட் தாமஸ், செயின்ட் பிரான்சிஸ், செயின்ட் பீட்டர், மதர் தெரசா, சிலுவையில் அறையப்பட்ட இயேசு மற்றும் தேவதைகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஆலய வரலாறு / கதைகள்

"பொது ஆண்டு 1909இல், ஃபாதர் செபாஸ்டியன் எஸ்.ஜே. (Fr. Sebastian S.J.) என்பவர், கொடைக்கானல் பகுதியில் வளர்ந்து வரும் கத்தோலிக்க சமூகத்திற்குச் ஆன்மிக சேவை செய்வதற்காக மூஞ்சிக்கல் என்ற பகுதியில் தேவாலயம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். இந்தத் தேவாலயத்தின் திருச்சபை அடிக்கல் நாட்டு விழா மே 15, 1910 அன்று நடைபெற்றது. அன்று பிஷப் பார்த்தே எஸ்.ஜே (Bishop Barthe S.J.) அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. கலைநயமிக்க நேர்த்தியான இப்போதைய திருச்சபைக் கட்டடம் அக்டோபர் 4, 1911 அன்று அதே பிஷப்பால் புனிதப்படுத்தப்பட்டது. 

 பல ஆண்டுகளாகப் பல்வேறு பாதிரியார்கள் தேவாலயத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். இவர்களில் முதல் திருச்சபைப் பாதிரியாராக இருந்தவர் ஃபாதர் ஜாலி எஸ்.ஜே. (Fr. Jolly S.J.) என்பவர் ஆவார். புனித இருதயத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அருட்தந்தை போன்ஹூர் எஸ்.ஜே. ( Fr. Bonhoure S.J.) என்பவர் பொது ஆண்டு 1947 - 1949 இல் மார்கரெட் மேரிக்குப் புனித இருதய நினைவுச்சின்னத்தை உருவாக்கினார். மேலும் ஃபாதர் டி.குழந்தைராஜ் எஸ்.ஜே. என்பவர் ’நட்பகம்’ என்ற பெரிய கட்டடத்தைக் கட்டினார். இது இளைஞர்களின் பொழுதுபோக்கு அரங்காகவும், பெண்களுக்குத் தையல் பயிற்சி அளிக்கும் இடமாகவும் செயல்பட்டது. அதே சமயம் ஃபாதர் அ.வேதமாணிக்கம் தேவாலயத்தைப் புதுப்பித்து அதன் பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். ஃபாதர். எல்.ஆனந்தம் (1995-1999) சமூக-அரசியல் மற்றும் மத முன்னேற்றங்கள், பள்ளிகளை மேம்படுத்துதல், லா சாலெட் ஆலயத்தை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகப் பெருமையை வளர்ப்பது போன்ற செயல்களில் முக்கியப் பங்கு வகித்தார். மற்ற பாதிரியார்கள், ஃபாதர் சூசை மைக்கேல்ராஜ் மற்றும் சகோதரர் எஸ்.சேவியர் ராஜ் ஆகியோர் சமூக நலன், சுயஉதவிக் குழுக்களைத் தொடங்குதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினர். இதுவே இந்தத் தேவாலயத்தின் விரிவான வரலாறு ஆகும்."

தேவாலயத்தின் அமைப்பு
இந்தத் தேவாலயத்தின் நுழைவாயில் முகப்புப் பகுதியில் இயேசு தன் கைகளை விரித்தபடி நிற்கும் சிற்பம் காணப்படுகிறது. தேவாலயங்களின் பிரார்த்தனை மண்டபம் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் மறுமுனையில் உள்ள பலிபீட மேடை, அரைக் குவிமாடம் வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது, இந்தக் குவிமாடத்தில் 5 பொந்துகள் உள்ளன. அவற்றில் கடவுள்களும் புனிதர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். தேவாலயத்தின் மேடை மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்

கொடைக்கானல் மறைமாவட்டத்தின் முதல் துணைத் தலைவராகவும் ஆன திருச்சபைத் தலைவர் எம்.அப்போலின் கிளாரெட் ராஜ் சிலுவையின் வழியைக் கட்டினார், ஆலயத்தின் வலப்பக்கத்தில் ஒரு பெரிய லா சலேத் குகையையும் ஒரு யாத்ரீக அலுவலகத்தையும் அமைத்தார். அவரது காலத்தில்தான் திருச்சபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது, அப்போது பேராயர் பீட்டர் பெர்னாண்டோ லா சலேத்தை மறைமாவட்ட ஆலயமாக அறிவித்தார். திருச்சபை வளாகத்தின் நுழைவாயிலில் அருட்தந்தை அப்போலின் நூற்றாண்டு வளைவையும் கட்டினார்.

வேறு பெயர்கள்
சேக்ரட் ஹார்ட் சர்ச்
தகவல்

க.த.காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்